Home » » 16 வயது சிறுவனை கத்தியால் குத்திய 19 வயது இளைஞன் கைது

16 வயது சிறுவனை கத்தியால் குத்திய 19 வயது இளைஞன் கைது


அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி தலைமறைவாகி வந்த 19 வயது இளைஞனை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பொலிஸ்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
கோளாவில் 3 பிரிவு முத்திலிங்கம் வீதியைச் சேர்ந்த சாகாம வீதியில் கடைகட்டிடத் தொகுதி ஓன்றின் உரிமையாளரின் 16 வயதுடைய மகனான லதாகரன் ஷஜந்; கடந்த மாதம் 28 ம் திகதி இரவு 8.00 மணியளவில் கடைகட்டிடத் தொகுதிக்கு சென்றபோது அங்கிருந்த இளைஞர் ஒருவர் இவர் மீது திடீரென கத்தியால் வயிற்றில்; குத்திவிட்டு தப்பிஓடியுள்ளார் இதனையடுத்து படுகாயமடைந்தவரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இச் சம்பவத்தில் கத்தியால் குத்திய ஆலையடிவேம்பு இத்தியடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர்; தலைமறைவாகிவந்த நிலையில் அவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்த பொலிஸ்பிணையில் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |