Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குறட்டை விடுவதை தடுப்பதற்கு நவீன தலையணை! அமெரிக்காவில் வடிவமைப்பு

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று குறட்டை விடுவதை தடுப்பதற்கு தலையணை ஒன்றை வடிவமைத்துள்ளது.

பொதுவாக தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கத்தால் பெரும்பாலன மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதனால் வெளிநாடுகளில் பலரது திருமண வாழ்வு விவாகரத்து வரை சென்றுள்ளது. 

இதன் காரணம் சரியான கோணத்தில் படுக்காமல் மூச்சுவிடுவதில் தடை ஏற்பட்டு, குறட்டை ஒலி எழும்புவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம், நவீன தலையணையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த தலையைணையில் சிறிய ரக, "மைக்ரோபோன்' கருவிகள் பொருத்தப்பட்டு, சென்சார் கருவிகளின் மூலம், குறட்டை ஒலி ஏற்படுவதை உடனே அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதை பயன்படுத்துவதன் மூலம் குறட்டை ஒலி ஏற்பட்ட உடனேயே, தலையணையில் உள்ள வைப்ரேட்டர் கருவி, அசைவின் மூலம் உறங்கும் நபரை எழுப்பி விடும்.இந்த சத்தத்தின் மூலம் தாங்கள் உறங்கும் நிலையை மாற்றிக் கொண்டால் குறட்டை ஒலி ஏற்படுவது தவிர்க்கப்படும். 

மேலும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சில நாட்களுக்குப் பின், தலையணை இல்லாமலேயே குறட்டை விடும் பழக்கம் நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என இதை வடிவமைத்துள்ள நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நவீன தலையணை சந்தையில், 9 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Post a Comment

0 Comments