Home » » கிழக்கில் மீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்

கிழக்கில் மீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்

கிழக்குமாகாணம் ‘கிழக்கின் உதயம்’ மற்றும் திவிநெகும எழுச்சிதிட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. மக்களின் வறுமை நிலையை போக்கு வதற்காக வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புறங்களே முக்கிய பங்களிப்புச் செய்து வருகின்றன. கைத்தொழில் துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, விவசாயத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி தேசிய உற்பத்தியில் கிராமப் புறங்களின் பங்களிப்பு மிக வும் அளப்பரியதாகும். இதன் அவசி யத்தை உணர்ந்து அரசாங்கம் ஒவ்வொரு திட்டத்தையும் முன்வைத்து அப்பிரதேச மக்கள் மேலும் விழிப்படையும் வகை யில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் நடத்தும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் அந்தந்த மாகாணங்கள், மாவட்டங்களில் குடி சைக்கைத் தொழில் விருத்திக்கு வேண்டிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக மட்டக்களப்பு மாவ ட்டத்தில் குடிசைக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் மாலை நேரங்களில் ஒருவரது வீட்டு முற்றத்தில் ஒன்று கூடும் பெண்கள் பனையோலை, பிரம்பு போன்றவற்றைக் கொண்டு அழகிய கைவினைப் பொருட்களை உருவாக்கிவருகின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் பொருட்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற் குட்பட்ட தாளங்குடா கிராமம் பனை யோலை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டு அங்குள்ளவர்களின் பனம்பொருள் கைவினைப் பணிக்கான ஊக்கு விப்புக்களை அரசாங்கம் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது கிராமிய ரீதியில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள் வோர், அதனை பயில விரும்புவோர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீன இயந்திரங்களை அறிமுகம்செய்து அவற்றை இயக்குவதற் கான பயிற்சிபெறும் வழிவகைகள் மற்றும் சிறியளவில் குடிசைக் கைத் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேவையான இயந்திரம் மற்றும் உத விகளும் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் சிறுகைத் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே குடிசைக் கைத்தொழில் காணப்படுகின்றது. இங்கு நவீன தொழில் நுட்பம் மற் றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் போதிய அறிவின்மை காணப்படுவதாக வும் சுட்டிக்காட்டப் படுகின்றது. இதனை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் திவிநெகும வாழ்வின் எழுச்சி திட்டம் ஊடாக அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளது.
ஒரு காலத்தில் குடிசைக் கைத் தொழிலில் கொடிகட்டிப்பறந்த மட்டக் களப்பு பிரதேசத்தின் கைத்தொழில் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே இங்கு வாழும் குடிசைக்கைத்தொழிலாளர்களது எதிர்பார்ப்பாகும்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |