Home » » புதிய விமானப்படை தளபதியாக கோலித்த குணதிலக பதவி ஏற்பு

புதிய விமானப்படை தளபதியாக கோலித்த குணதிலக பதவி ஏற்பு

விமா­னப்­ப­டையின் 14 ஆவது புதிய தள­ப­தி­யாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக இன்று தனது கட­மை­களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
ஓய்வு பெறும் விமா­னப்­படை தள­பதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம நேற்று தனது பத­வி­யினை புதிய தள­ப­தி­யான கோலித்த குண­தி­ல­க­விடம் கைய­ளித்­ததை தொடர்ந்தே இன்று அவர்உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
 
நேற்­றைய தினம் எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம தனது பத­வியை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­ல­க­வுக்கு கைய­ளிக்கும் நிகழ்­வா­னது விமா­னப்­படை தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. இதன் போது உத்­தி­யோக பூர்­வ­மாக தனது பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுக்­கொண்ட எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம விமா­னப்­படை தலைமை பொறுப்பை எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­ல­க­விடம் கைய­ளித்தார்.
 
2006 ஆம் ஆண்டு விமா­னப்­ப­டையின் கட்­டளை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஹர்ஷ அபே­விக்­ரம 2011 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 27 ஆம் திகதி விமா­னப்­ப­டையின் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். இந் நிலை­யி­லேயே மூன்­று­வ­ருட சேவையின் பின்னர் எயார் மார்ஷல் ஹர்ஷ அபே­விக்­ரம ஓய்வு பெற்­றுக்­கொண்டார்.
 
இதனை அடுத்து புதிய விமா­னப்­படை தள­ப­தி­யாக எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக இன்று கட­மை­யினை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பெறுப்பேற்றுக் கொண்டார்.
 
இது­வரை விமா­னப்­ப­டையின் தலைமை அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றி­வந்த நிலை­யி­லேயே எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குண­தி­லக தள­ப­தி­யாக நிய­மனம் பெற்­றுள்ளார்.
 
கொழும்பு ரோயல் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான கோலித்த குண­தி­லக பாது­காப்புக் கல்­லூ­ரி­யி­னதும் பழைய மாண­வ­ராவார். அத்­துடன் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் எயார் வைஸ் மார்ஷல் கோலித்த குணதிலக முது நிலை பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |