Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும் 1-வது மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும்.

கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும், 1-வது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும் பாடசாலை அதிபர் சி.சிவனேசராஜா தலைமையில் 21.02.2014அன்று நடாத்தப்பட்டது. 1.06.2011ம் வருடம் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அக்குறானை பாடசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவும் 1-வது இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவுமே இன்று நடைபெற்றது. மிக நீண்ட தூரம் பயணித்து அக்குறானை பிரதேச மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலையே 1999ம் ஆண்டு தொடக்கம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் புதிய பாடசாலை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. பின் முன்னாள் முதலமைச்சரின் முயற்சியின் பலனாக 2011ம் வருடம் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமாக சி.சந்திரகாந்தன அவர்களும்;, கௌரவ அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ கிருஸ்ணராஜா, பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.குலேந்திரராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோட்டக் கல்வி பணிப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
                   
                  
                 

Post a Comment

0 Comments