இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களில் மிகப் பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகத்துக்கு அருகாமையில் இறந்த நிலையில் இலட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கி உள்ளன.
இதனால் அப்பகுதி எங்கும் நாற்றம் வீசுகின்றது. கடற்கரையோர ஏரியா மாசுபட்ட காரணத்தினால் தான் மேற்படி மீன்கள் இறந்ததாக சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்படியான சம்பவம் இதோடு இரண்டாவது தடவை நிகழ்வதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கப்பலில் இருந்து தேவையில்லாத அழுக்கு இரசாயனங்கள் கசிந்திருந்தாலும் மேற்படி சம்பவம் இடம்பெற்று இருக்கும் என சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments