இலங்கைக் கடற்பரப்பில் சீனப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. வெளி மீனவர்கள் இலங்கை மீன்பிடி வளங்களை சூறையாடுவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் மட்டும் இலங்கை மீனவர்களுக்கு அச்சுறுத்தல் கிடையாது. எங்களது கடற்பரப்பில் கூட எமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. உள்நாட்டு மீனவர்களை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments