Advertisement

Responsive Advertisement

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் கமரூன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை!

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விசேட விமானம் மூலம் விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. அதே வேளை பிரதமர் கமரூன் யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார். பொதுநலவாய நாடுகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கமரூன் பின்னர் விசேட விமானத்தில் யாழ் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
  
   

Post a Comment

0 Comments