Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தம்புள்ளை அம்மன் கோவில் தரை மட்டமாக்கப்பட்டமைக்கு முஸ்லிம் மக்கள் கட்சி கணடனம்.

தம்­புள்ளை அம்மன் கோவில் தரை மட்­ட­மாக்­கப்­பட்­ட­மை­யா­னது இந்த நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு விடுக்­கப்­பட்ட சவால் என்­ப­துடன் இதன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கும் பாரிய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரி­வித்­துள்­ளது.
இது பற்றி கட்­சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரி­வித்­துள்­ள­தா­வது, கடந்த வருடம் தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­போது அதனை தாக்­கி­ய­வர்­களை கைது செய்­ய­வில்லை என்ற கார­ணத்­தினால் அர­சாங்­கத்­துக்­கான ஆத­ர­வி­லி­ருந்து வில­கிக்­கொண்ட ஒரே­யொரு முஸ்லிம் கட்சி எமது கட்சி மட்­டுமே. அன்று நாம் அவ்­வாறு செய்­யா­தி­ருந்தால் இன்று நாமும் அர­சாங்­கத்தின் பின்­ன­ணியில் நடந்த அனைத்து பள்­ளி­வாசல் உடைப்­புக்கும் பங்­கு­தா­ரி­க­ளாக இறைவன் முன்பு குற்­ற­வா­ளி­க­ளாக இருந்­தி­ருக்க வேண்டி வரும்.ஆனால், சுய­நல ஏமாற்று அர­சி­யலை ஒழித்து உண்மை, வாய்மை, நேர்மை என்ற இஸ்­லா­மிய அர­சி­ய­லுக்கு வழி காட்டும் எமக்கு இறைவன் தந்த உதிப்பின் கார­ண­மாக அர­சுக்­கான ஆத­ரவு நிலைப்­பாட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தோடு நிற்­காமல் பள்­ளி­வாசல் உடைப்­புக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காத அர­சுக்கு ஆத­ர­வ­ளிப்­பதன் மூலம் முஸ்லிம் காங்­கி­ரஸும் ஏனைய முஸ்லிம் அமைச்­சர்­களும் இந்த அநி­யா­யங்­களின் பங்­கா­ளிகள் என்­பதை உரக்கச் சொல்லி வரு­கிறோம்.தற்­போது தம்­புள்­ளை­யி­லி­ருந்த இந்து கோவில் தரை மட்­ட­மாக்­கப்­பட்­டி­ருப்­பதன் மூலம் தம்­புள்ளை பள்­ளியும் இடிக்­கப்­படும் என்ற செய்­தியை பகி­ரங்­க­மாக சொல்­லி­யுள்­ளார்கள். அதுவும் பொது­ந­ல­வாய மாநாடு நடக்­க­வி­ருக்கும் நிலையில் இதனைச் செய்­துள்­ளமை மூலம் எந்­த­ள­விற்கு நாட்­டுப்­பற்­றற்­ற­வர்­க­ளாக இந்த இன­வா­திகள் இருக்­கின்­றனர் என்­பது தெரிய வரு­கி­றது.இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்ளும் முஸ்லிம் நாட்டுத் தலை­வர்­க­ளிடம் இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் இத்­த­கைய பிரச்­சி­னை­களை ஆங்­கிலம் மற்றும் அரபு மொழி­களில் எழு­தப்­பட்டு அவர்­க­ளுக்கு விளக்கம் கொடுக்க பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்­சிகள் முன்­வர வேண்டும். அதிலும் முஸ்­லிம்­களின் அதி­க­பட்ச வாக்­கு­களைப் பெற்­ற­வர்கள் என பேசும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இதனை கவ­னத்தில் எடுக்க வேண்டும். இவ்­வாறு நாம் சொல்­வதன் மூலம் அக்­கட்­சியை இக்­கட்டில் நாம் தள்­ளி­வி­ட­வில்லை. மாறாக தேர்­தல்­களில் தனித்து நின்று தைரி­ய­மாக போட்­டி­யிட முடியும் என்றால் ஏன் இத்­த­கைய சமூக விட­யங்­களில் முன்­னின்று செயற்­பட முடி­யாது என்றே கேட்­கின்றோம்.
சிங்­கள இன­வா­திகள் நாட்டின் அப­கீர்த்­தியை கொஞ்­சமும் கணக்கில் எடுக்­காமல் இந்த சூழ்­நி­லையில் கோவிலை இடிக்­கி­றார்கள் என்றால் நாமும் நமது நிலையைச் சொல்ல வேண்­டி­யது நமது கட­மை­யாகும்.
அதனை விடுத்து நவ­நீ­தம்­பிள்ளை வந்து போனதும் அவரை கட்சி ரீதியாக சந்தித்து பேச முடியவில்லை என தமது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தி அறிக்கை விட்டது போல் இவற்றை செய்யாமல் பொதுநலவாய மாநாடு முடிந்ததும் ஏதாவது காரணத்தைக் கூறி அறிக்கை விட வேண்டாம் என அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்கும் சொல்லி வைக்கின்றோம் எனவும் கூறினார்.

Post a Comment

0 Comments