Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையர் 18பேர் பலி; காரணமானவரை நாடு கடத்த அமெரிக்கா திட்டம்


இலங்கையைச்சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் 18 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்தாரென கூறப்படும் பல்கேரிய பிரஜையொருவரை அமெரிக்கா நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.


20 வருடங்களுக்கு முன்னர் ட்ரக் வண்டியில் மறைத்து எடுத்துச் சென்ற 18 இலங்கை கள்ளக் குடியேற்றக்காரர்கள் மூச்சுத்திணறி இறப்பதற்கு காரணமாக இருந்தாரென அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


தலைமறைவாக வாழ்ந்து வந்த குறித்த சந்தேகநபரான பல்கேரிய பிரiஐ அமெரிக்கா விலுள்ள சீட்டில் எனுமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரை அவரது தாய் நாட்டுக்கு நாடுகடத்தக்கூடுமென அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை கூறினர்.


பல்கேரியாவில் 2002 இல் இவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் இவர் தலைமறைவாகிவிட்டார். இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நீண்ட தூர டிரக் சாரதியாக பணியாற்றினார்.


இவர் 1995 இல் பிலாஸ்டிக் பொருட்களுக்கிடையே 40 இலங்கையர்களை மறைத்து ருமேனியாவிலிருந்து ஹங்கேரிக்கு டிரக் வண்டியில் கொண்டு சென்றார்.

Post a Comment

0 Comments