ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு நியமனங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையின் ஆய்வைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதனை அவர் வெளிப்படுத்தினார்.
ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப் பணியில் இணைப்பது சாத்தியமில்லை எனவும், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குப் பின்னர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பணி வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், சில வைத்தியர்களை சுற்றுலாத் துறையில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மேற்கத்திய வைத்தியத்துடன் ஆயுர்வேதம், சித்தம், மற்றும் யுனானி வைத்திய முறைகளும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், இவ்வாண்டு பாதீட்டில் உள்ளூர் வைத்தியத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்துறைகள் புறக்கணிக்கப்படாமல், அனைத்து வைத்திய முறைகளுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்குவது தனது பொறுப்பு எனவும், இவை குறைவாக கவனிக்கப்படும் துறைகள் அல்ல எனவும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments