Home » » உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படலாம்

 


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு நேற்று (03) தெரிவித்தார்.

இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் 20,000 ஆசிரியர்களும், 1,100 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த பரீட்சை, இந்த ஆண்டு ஜனவரி 23ம் திகதி முதல் பெப்ரவரி 17ம் திகதி வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |