Home » » உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்தில்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்தில்


 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் சில தினங்களில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பனியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் பரீட்சை, ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17, 2023 வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது. 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

https://chat.whatsapp.com/Lb3JH83r7Ec8lBYTf3R8x6


ஆசிரியர்களின் தொழில்முறை நடவடிக்கைகளால் உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |