Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொடிய பக்டீரியா கொழும்புக்கு

 


காலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை பிரதேசத்தில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்க தெரிவித்தார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் உள்ள சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments