Advertisement

Responsive Advertisement

தேர்தல் நடக்குமா?

 


எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முக்கியமான தேவைகளுக்கு மாத்திரம் பணத்தை செலவிட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்திய கடுதாசியில் தெரிவித்துள்ளதாக மேலதிக சொலிசிடர் ஜெனரல் நெரில் புல்லே தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிடர் ஜெனரல் நெரில் புல்லே உயர்நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 23ம் தேதி வரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தேர்தலை நடத்த பணம் வழங்கப்படவில்லை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான பிப்ரவரி மாத செலவினங்களை ஈடு செய்வதற்கு பணத்தை வழங்கக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

பிப்ரவரி மாத செலவினங்களுக்கு மட்டும் 770 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

எனினும், இன்று வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தாம் தலை வணங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.

தேர்தலை நடத்துவதற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா தமக்கு கிடைத்துள்ளமையினால், அதனை கொண்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

சூடு பிடிக்காத தேர்தல் களம்

இலங்கையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே காணப்படும்போதிலும், தேர்தல் களம் இன்று வரை சூடுபிடிக்கவில்லை.

இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பிரசார நடவடிக்கைகளில் மந்த நிலைமை காணப்படுகின்றது.


Post a Comment

0 Comments