Home » » நாளை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை நடைமுறையில் மாற்றம் : பரீட்சைத் திணைக்களம்

நாளை நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை நடைமுறையில் மாற்றம் : பரீட்சைத் திணைக்களம்

 


நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை வழங்கும் நெறிமுறை மாற்றப்பட்டுள்ளதாக (பகுதி II வினாத்தாள் முதலிலும் பகுதி I பின்பும்) பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். எனவே மாணவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களுக்கு தனியான பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |