Home » » நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியால மின்வெட்டு- இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !

நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியால மின்வெட்டு- இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !

 


நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர எச்சரித்துள்ளார்.


எதிர்வரும் மாதத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாகவும் மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் இயங்கவில்லை என்றும், நவம்பர் மாதத்திற்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |