Advertisement

Responsive Advertisement

பேருந்து பயணிகளுக்கு மின்னணு பயண அட்டைகளின் முன்னோடி திட்டம் இன்று அறிமுகம் !

 


தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) காகித பஸ் டிக்கெட்டுகளுக்கு பதிலாக மின்னணு அட்டைகள் அல்லது டச் பயண அட்டைகள் என அழைக்கப்படும் பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.


“கொட்டாவவில் உள்ள மகும்புர பல்வகை மையத்திலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக காலி வரை பயணிக்கும் பஸ்களில் முன்னோடி திட்டம் இன்று மேற்கொள்ளப்படும்” என NTC இன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

மின்னணு அட்டைக்கான மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், கணினியை சோதனை செய்து, குறைபாடுகள் இருந்தால் கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments