Home » » நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு

 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. 




ஆலய மரபின் படி நல்லூர் கிழக்கு சட்ட நாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிடேக ஆராதனைகளைத் தொடர்ந்து, கொடிச் சீலை தயாரிக்கும் மரபினையுடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர். 

நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா நாளை 02 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |