Home » » ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

 


ரணில் வெளியிட்ட விசேட அறிக்கை 

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மைப் பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

அதுவரை நாட்டின் விவகாரங்களை முன்னெடுத்துச் செல்ல பிரதமராக பணியாற்றுவேன்.

ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு | Pm Ranil Released Special Announcement Sl Crisis

இன்று இலங்கையில் எரிபொருள் பிரச்சினையும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதற்காக உலக உணவு அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளன.

விரைவில் புதிய அரசாங்கம்

ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு | Pm Ranil Released Special Announcement Sl Crisis

எனவே தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்த பின்னர் உடனடியாக வேறொரு அரசாங்கத்தை நியமிக்க வேண்டும்.

முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளரும் இந்த வாரம் இலங்கைக்கு வரவுவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |