நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வாகனத்தை அங்கிருந்து ஆர்ப்பாட்டக்கார்கள் தாக்கியுள்ளன.
கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்த ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரிததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/bdd5312b-851c-4689-9e47-107d30ab6eb4/22-6278fd2f46ebf.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2161da8c-d9f7-4186-858f-8d387af95250/22-6278ff7328821.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c66f2e23-036b-4e8e-a8ae-c83e2b090d52/22-6278ff73555ca.webp)
0 comments: