நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர் சமந்த குமாரசிங்க (Samantha Kumarasinghe) பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும், பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சமந்த குமாரசிங்க நாட்டின் மிகப் பெரிய மூலிகை அழகுசாதனப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளராக காணப்படுகிறார்.
2019 இன் பிற்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு அவர் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அண்மைக் காலமாக நாணயச் சபையின் கூட்டங்களில் போது அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும், ரூபாயை மிதக்க விடும் நாணயச் சபையின் முடிவை அவர் பெரிதும் எதிர்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments