Home » » உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யாவின் பகிரங்க அறிவிப்பு!

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யாவின் பகிரங்க அறிவிப்பு!

 


உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி உக்ரைன் நேரப்படி காலை ஆறு மணி முதல் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் இருபத்துநான்காம் திகதி அந்த நாட்டின் மீது யுத்தத்தை மேற்கொண்டிருந்தது.

கடந்த பத்து நாட்களாக உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.    

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |