Advertisement

Responsive Advertisement

வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்ததில் குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்

 


மஸ்கெலியா – காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்டு சரிந்து விழுந்து வீடொன்று முற்றாக சேதமடைந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் பின்புறமாக இருந்த மண்திட்டே இவ்வாறு விழுந்துள்ளதுடன், சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த இரண்டு வயது குழந்தையும், 32 வயது தாயும், 65 வயது ஆணொருவருமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments