Home » » 2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!


 2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் நலன் கருதி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கால எல்லை நீடிக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'Exams Sri Lanka' ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி இதற்காக விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக பெப்ரவரி 10 ஆம் திகதி வரை இந்த கால எல்லை நீடிக்கப்பட்டிருந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |