Home » » பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் யானை வேலி பராமரிப்பு

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் யானை வேலி பராமரிப்பு



(அஸ்ஹர் இப்றாஹிம்  )

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் யானை வேலி பராமரிப்பு  வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் பயிற்சி இன்று ( 31)  திங்கட் கிழமை  பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாறை உகன பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு  மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இச் செயல் திட்டத்தின் கீழ் நாடு தளுவிய ரீதியில் 4000 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |