Advertisement

Responsive Advertisement

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதி அகலமாக்கப்பட வேண்டும்.



( அஸ்ஹர் இப்றாஹிம்)

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை  வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பாலம் மிகவும் ஒடுக்கமாக காணப்படுவதால் சிறிய வாகனங்களைத் தவிர லொறிகள் , பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையொன்று கடந்த பல வருடங்களாக நிலவுகின்றது.
இப்பாலத்தின் ஊடாக ,  வைத்தியசாலை வீதி  உப தபாலகம்,  சாய்ந்தமருது  றியாலுல் ஜன்னா வித்தியாலயம்,  தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா, சாய்ந்தமருது ஆயுர்வேத மருந்தகம் , பள்ளிவாசல் , சாய்ந்தமருது இராணுவ முகாம் போன்றவற்றிற்கு செல்ல வேண்டியுள்ளது.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கும் அரசியல் வாதிகள் இப் பாலத்தின் அபிவிருத்திபற்றி பேவாத மேடைகளே இல்லை. தேர்தல் முடிந்த கையோடு இப்பாலத்தின் கதையும் முடிவுறும்.. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்த்த்தின் போது இப்பாலத்தை சார்ந்த பிரதேசங்கள் பாரிய அழிவுக்கு உட்பட்டிருந்த்து.த்தனையோ தன்னார்வு நிறுவனங்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மீளகட்டியெழுப்பும் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செனற போதிலும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு அரசியல் வாதிகளின் கண்ணுக்கும் இது புலப்படவிவ்லை.
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பதே சாய்ந்தமருது   மக்களின் விருப்பமாகும்.

Post a Comment

0 Comments