( றம்ஸீன் முஹம்மட்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்து வந்த அம்பாறை மாவட்டம் லாஹூகல பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
புதிய தலைவரை தெரிவு செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பிரிந்து வாக்களித்த காரணத்தினால், பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபையின் முன்னாள் தலைவரான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் பதவிக்கு நிறுத்திய உறுப்பினருக்கு வாக்களித்தமை விசேட அம்சமாகும்.
0 Comments