Home » » மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பம்!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பம்!

 


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது போக்குவரத்து அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி அவர்களின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 28.01.2022 திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.

இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52 க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அஸ்ஹர் இப்றாஹிம்) 

பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு 2021.04.29ம் திகதி பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால்  போக்குவரத்து அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட  கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பொலன்னறுவை முதல் கொழும்பு வரையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ரயில் சேவையானது பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு கொழும்பினை வந்தடைகின்றது.
அதேபோன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு பொலநறுவையினை சென்றடைகின்றது. இந்தநிலையில் அதிகாலை 3 மணிக்கு பொலன்னறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டால் இன்னும் அதிகளவிலான மக்கள் பயனடைவார்கள்..
அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடன்னேயே ரயில் கொழும்பினை சென்றடைகின்றது. பொலன்னறுவை யில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானர்கள் பயணிக்கின்றனர்.
எனவே பொலன்னறுவை க்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொலன்னறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஏனெனில் தற்போது மட்க்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் ரயில் பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனினும் காலை 9 மணிக்கு கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளை பூர்த்தி செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்கு திரும்பி செல்ல முடியும்.
பொலநறுவை -கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையிலான "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை 28-01-2022 திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு  சேவையாக விஸ்தரிக்கப்படும். என இன்றைய  தினம் 2022.01.25ம் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.மீண்டும் பிற்பகல் 15.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 21.52க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் பெரும் சந்தோசத்தினை அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் பொத்துவில் , அக்கரைப்பற்று , அம்பாறை கல்முனை ஆகிய இடங்களிலிருந்து மட்டக்களப்பு புகையிரத்திற்கு செல்வதற்கும் மட்டக்களப்பிலிருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு புகையிரதத்தில் பயணிப்போரின் நன்மை கருதி இணைப்பு பஸ் சேவையினை நடாத்த இலங்கை போக்க்குவரத்து சபை சலை பொறுப்பு முகாமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கேட்டுள்ளனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |