Home » » குழந்தைகளிடையே கொவிட் -19 தொற்று அதிகரித்து வருகிறது -சுகாதார அமைச்சு

குழந்தைகளிடையே கொவிட் -19 தொற்று அதிகரித்து வருகிறது -சுகாதார அமைச்சு

 


கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து வயதினரிடையேயும் கொவிட்-19 தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கணிசமான எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .தற்போது லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைப் பெறுகின்றனர், அதே நேரத்தில் சுமார் 10 முதல் 15 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்காக நாளாந்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகினறனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி நடுப்பகுதியில் நிலவும் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களை முடிந்தவரை விரைவாக பூஸ்டர் டோஸைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |