Home » , » ராஜபக்ஷ சகோதரர்களிடையே மூண்டது பனிப்போர்?

ராஜபக்ஷ சகோதரர்களிடையே மூண்டது பனிப்போர்?

 


ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடையே மோதல் பனிப்போர் மூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நேற்றைய தினம் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி நீக்கப்பட்டதையடுத்தே இந்த மோதல்  நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட லிட்ரோ காஸ் நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்கவை, கோட்டாபயவுக்கு அறிவிக்காமல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பதவியிலிருந்து நீக்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

அத்துடன் கோட்டாபயவுக்குத் தெரியப்படுத்தாமலேயே புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பசில் மேற்கொண்ட நியமனத்தை இரத்து செய்த கோட்டாபய மீண்டும் தெஷார ஜயசிங்கவை நியமிக்குமாறு உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முத்துராஜவெல மாபிம லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு அரச தலைவர் நேற்று விஜயம் செய்த போது, ​​தெஷார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக தெஷார ஜயசிங்கவை மீண்டும் நியமிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கோட்டாபய பணிப்புரை விடுத்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, ரேணுக பெரேராவின் நியமனக் கடிதம் இரத்துச் செய்யப்பட்டு, தெஷார ஜயசிங்கவை மீண்டும் நியமனம் செய்வதற்கான நியமனக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ராஜபக்ஷ சகோதர்களுக்கு இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த சம்பவமும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |