( எம்.ஏ.ஏ.அக்தார் )
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பைசர் முஸ்தபாவின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு தலைமை அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பொருளாளர் லசந்த அழகிவன்ன, சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான காமினி திலகசிறி, ஹெக்டர் பெத்மகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments: