Home » , » இம் முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன்கருதி முன்னோடிப் பரீட்சை

இம் முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன்கருதி முன்னோடிப் பரீட்சை



( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது யு.எஸ்.எப்.ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பு இம் முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன்கருதி ” கல்விக்கு கரம் கொடுப்போம் ”  எனும் தொணிப்பொருளில் சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் அடிப்படையில்  புலமைப் பரிசில் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை வினாத்தாள் அடங்கிய பொதிகளை சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களிடம் அமைப்பின் செயற்பாட்டாளர்களினால் கையளிக்கப்பட்டன.
இந்த பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட இருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்..
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |