Home » » பேராதனை பல்கலைக்கழகத்தினால் தேசியரீதியாக நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் முதலாமிடம்.

பேராதனை பல்கலைக்கழகத்தினால் தேசியரீதியாக நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் முதலாமிடம்.

 



பேராதனை பல்கலைகழகத்தின் Rotaract Club யினால் தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞான பிரிவு மாணவன் Ilham Jazeel Ahamed Jazif  அவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கான இம் மாணவனுக்கு  பணப்பரிசில்களும், புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

பாடசாலையின் அதிபர் MI. ஜாபிர் அவர்கள் மாணவனை பாராட்டியதோடு மேற்படி நிகழ்வில் பாடசாலையில் புகைப்பட மற்றும் ஒளிபரப்பு கழகத்தின் பொறுப்பாசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில் உப பொறுப்பாசிரியர்களான MYM. ரகீப், MHM. முஸ்தன்சிர்  போன்றோரும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |