Home » » நாட்டில் கொரோனா மரணங்கள் உயர்வு

நாட்டில் கொரோனா மரணங்கள் உயர்வு

 


நாட்டில் மேலும் 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் நவம்பர் 5ஆம் திகதி பதிவாகியுள்ளன.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,841ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 ஆண்களும் 7 பெண்ளுமாக 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். 3 ஆண்களும் 3 பெண்களுமாக 6 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்.

இந்நிலையில் மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை 514,573 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதேவேளை 544,013 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 15,280 ஆகக் குறைவடைந்துள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |