Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது வெளியான புதிய செய்தி

 


இலங்கையில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி ஒக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பப்பிரிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இன்று (22) குறிப்பிட்டார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான 4 கட்டங்களில் முதலில் 200க்கும் குறைவாக உள்ள பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்பட்டன.

அடுத்த கட்டமாக ஆரம்பப்பிரிவுகள் 25ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments