Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

 


ஒன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பொலிஸ திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில் குறித்த கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, குறித்த ஆசிரியர்கள் அவசியம் ஏற்படின் 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கும் இது தொடர்பில் அறிவிக்க முடியும். 

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் தாமதிக்காமல் சரியான முறையில் மிகவும் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்

Post a Comment

0 Comments