Advertisement

Responsive Advertisement

ரிஷாட்டின் மனைவிக்கும், மாமனாருக்கும் பிணை : ரிஷாட் தொடர்ந்தும் உள்ளே

 


ஹிஷாலினி ஜுட் குமார் என்ற 16 வயதான சிறுமி, தீ காயங்களுக்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


ரிஷாட் பதியூதீனை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Post a Comment

0 Comments