Home » » தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மகன்...!!

தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மகன்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலியர் கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 44 வயதுடைய மகனை கைது செய்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலைய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயார் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த தாயாரின் வீட்டுக்கு சென்ற மகன் தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்த நிலையில் தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அங்கிருந்த கத்தியால் தாயாரின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து தாயாரை வெட்டி கொலை செய்த 44 வயதுடைய மகனை கைது செய்ததுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருக்கின்றனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |