Home » » மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


 (ஷமி மண்டூர்)


மட்டக்களப்பு தலைமையகபொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாடசாலை விதி நாவற்கேணி மட்டக்களப்பு பிரதேசத்தைச்சேர்ந்த (18) வதுடைய சந்திரகுமார் தனுஷ்காந்; என்பவர் தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயரிழந்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்- குறித்த இளைஞன் தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்த வேளையில் உறவினர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய்சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதனை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எச்.எம்.ஹகீம் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |