இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் உடல் ஊறணி பொது மயானத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யபபட்டது.
ஊறணி,மன்றேசா வீதியில் உள்ள அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் சின்ன ஊறணியை சேர்ந்த மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு மணி நேரம் உயிரிழந்த நபரின் இல்லத்தில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அமல் எங்கள் நண்பனை மீட்டுத்தரமுடியுமா? கரங்கொடுத்து தூக்கிவிட்டவர்களை காலடியில் நசுக்கும் விசமிகளின் பசிக்கு இரையாகிய அப்பாவி இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பதாதையினை தாங்கி சடலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன் போது சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
0 comments: