Home » » டெல்டா வைரஸால் ஆபத்தில் இலங்கை! நாடு திறக்கப்பட்ட நிலையில் வெளிவந்த புதிய எச்சரிக்கை

டெல்டா வைரஸால் ஆபத்தில் இலங்கை! நாடு திறக்கப்பட்ட நிலையில் வெளிவந்த புதிய எச்சரிக்கை

 


இலங்கையில் ஆபத்தான டெல்டா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்த காணப்படுவதால் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டிற்குள் வேகமாக விரிவடைந்து வரும் டெல்டா வைரஸ் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும்.

சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கட்டாயம் மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் தெமட்டகொட பகுதியில் இருப்பது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் உபுல் ரோஹன குறிப்பிட்டார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |