Home » » மட்டக்களப்பு- இருதயபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு- இருதயபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

 


மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இருதயபுரம்- ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன் குரூஸ் (49 வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டு.மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் இவர், செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |