நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 55 மரணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2315 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 33 ஆண்களும், 22 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments