Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று மாத்திரம் 2877பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 189241ஆக அதிகரிப்பு...!!

 


இலங்கையில் இன்று மேலும் இரண்டாயிரத்து 877 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 241ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 631 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 371 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 34ஆயிரத்து 386 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 16 இலட்சத்து 91 ஆயிரத்து 562 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 49ஆயிரத்து 745பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments