கொட்டகலை - பொரஸ்ட்கிரிக் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உள்ளிட்ட 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த தோட்டத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில், குறித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கும் கொவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளில் சுகாதார தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments