இலங்கையிலுள்ள மேலும் 12 மாவட்டங்களில் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி முதல் நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, புத்தளம், கேகாலை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், மொனராகலை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments