Home » » மட்டக்களப்பில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் முடங்குகின்றன! கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 178 பேருக்கு கொரோனா !

மட்டக்களப்பில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் முடங்குகின்றன! கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 178 பேருக்கு கொரோனா !

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஏழு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1026 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், சராசரியாக நாளொன்றுக்கு 150பேர் வீதம் இனங்காணப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 178கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு காரணம் ஒன்றுகூடல்கள் எனவும், ஒன்றுகூடல்களை தவிர்ப்பதன் மூலமே கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |