Home » » பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் - அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் - அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

 


திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பகொட்ட பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வீட்டுக்கு முன்னால் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டியதில் சிறுவன் மயக்கமுற்ற நிலையில், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று (16) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு பாம்பு கடித்த சிறுவன் திருகோணமலை - கம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த தேவிந்த பிரசாந் (10வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |