இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மாற்று பொறுப்புக் கூறும் பொறிமுறையை ஏற்படுத்துமாறு அமெரிக்காவின் வெளிவிவகார தொடர்புகளுக்கான குழு, ஜெனிவா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்குள் கொரோனா தொற்று நோய் பரவி வரும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க அதிகாரிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை அமெரிக்காவின் வடக்கு கெரோலினா மாநிலத்தின் செனட் உறுப்பினர் விலி நிக்கல், இலங்கையின் வடக்கு கிழக்கில் மனித உரிமை பேரவையின் அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு ஐ. நா மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments: